இறைவன் அருளோ,
மரபின் தரமோ,
பஞ்சமில்லா ஞானம்!
அச்சமோ, சோம்பலோ
ஆழ் செல்ல தயக்கம்!
அகலம் எளிதாவதால்,
நாற்புறமும் பரவுகிறேன்!
ஆழமில்லா அகலம்
கால விரயம்!
Sep 25, 2010
Sep 8, 2010
தனித்துவம்
இது தான் இயல்பென்று
வாழ்வோடத்தில் தனித்துவம்
தொலைக்கும் கோழையாகாததால்
விலகிய சமூகம்
தனிமையை தானமாக்கியது!
சுழலும் கால சக்கரத்தில்
சரி, தவறு இட மாறும்!
உறுத்தாத மனசாட்சி
நேர்மைக்கு சாட்சி!
வாழ்வோடத்தில் தனித்துவம்
தொலைக்கும் கோழையாகாததால்
விலகிய சமூகம்
தனிமையை தானமாக்கியது!
சுழலும் கால சக்கரத்தில்
சரி, தவறு இட மாறும்!
உறுத்தாத மனசாட்சி
நேர்மைக்கு சாட்சி!
பின் தொடரும் குழப்பம்
முடிவற்ற இலக்குகள்
தெளிவற்ற பாதைகள்
நாளை ஒரு கேள்விக்குறி?
தொடக்கமும் முடிவும் ஒன்று
இருந்தும் குழப்பங்கள்
நிழல் போல்!
தெளிவற்ற பாதைகள்
நாளை ஒரு கேள்விக்குறி?
தொடக்கமும் முடிவும் ஒன்று
இருந்தும் குழப்பங்கள்
நிழல் போல்!
அந்தரங்கம்
பொக்கிசங்களும், குப்பைகளும்
மனதின் ஆழத்தில்!
என்னை இழக்கும் தருணங்களில்
மெல்ல வெளி வந்து
மீண்டும் சிறை செல்லும்!
பகிர்ந்து கொள்ள முடியாத
உணர்வுகள் சாபமே!
மனதின் ஆழத்தில்!
என்னை இழக்கும் தருணங்களில்
மெல்ல வெளி வந்து
மீண்டும் சிறை செல்லும்!
பகிர்ந்து கொள்ள முடியாத
உணர்வுகள் சாபமே!
எனக்குள் நான்!
மகிழ்சியும் நானே! துக்கமும் நானே!
அன்பும் நானே! வெறுப்பும் நானே!
சாந்தமும் நானே! ருத்ரமும் நானே!
நன்றும் நானே! தீதும் நானே!
யோகியும் நானே! போகியும் நானே!
ஜனமும் நானே! மரணமும் நானே!
மாறாததும் நானே! மாறுவதும் நானே!
கடவுளும் நானே! மிருகமும் நானே!
Sep 7, 2010
Subscribe to:
Comments (Atom)








