Sep 8, 2010

தனித்துவம்

இது தான் இயல்பென்று
வாழ்வோடத்தில் தனித்துவம்
தொலைக்கும் கோழையாகாததால்
விலகிய சமூகம்
தனிமையை தானமாக்கியது!

சுழலும் கால சக்கரத்தில்
சரி, தவறு இட மாறும்!
உறுத்தாத மனசாட்சி
நேர்மைக்கு சாட்சி!